ஞாயிறு, 6 மே, 2018

நான் வரும் வரை

ஆசைப்படுவது ஆணின் குணம்
ஆசைப்படுபவனை அலைக் கழிப்பது
பெண்ணின் குணம்
காத்திருப்பது ஆணின் குணம்
காத்திருப்பவனைத் துடிக்க வைப்பது
பெண்ணின் குணம்
ஆண் அடைகிறவனாகவும், பெண்
ஆடையப்படுகிறவளாகவும் இயற்கை
விதித்திருக்கிறது
அதனால் காதல் உலகத்தில் பெண்
உயரத்தில் நிற்கிறாள்
ஆண் கீழே நிற்கிறான்
இதனால் பெண்ணுக்கு கர்வம்
அவள் சிம்மாசனத்தில் அமர்ந்து
கட்டளை இடுகின்றவளாக இருக்கிறாள்
அவனோ அவள் ஏவுவதைச் செய்யும்
அடிமையாகிறான்
தன் கண் ஜாடைக்கும் கைவிரல்
அசைவுக்கும் அவன் ஆடுவதைப்
பார்ப்பதில் அவளுக்கு இன்பம்
தன் கண் பார்வைக்கு
அவன் ஏங்க வேண்டும், தன் தயவுக்கு
அவன் கெஞ்ச வேண்டும் என்று
அவள் ஆசைப்படுகிறாள்
அவன் குற்றமே புரியாதிருந்தும்
வேண்டுமென்றே குற்றம் சுமத்தி
ஊடுகின்றாள். அவன் சமாதானம்
சொல்லிக் காலில் விழுந்து
கெஞ்ச வேண்டுமென்று அவளுக்கு ஆசை
காதலி காத்திருக்கச் சொன்னாள்
காதலனும் அதை நம்பி காத்திருந்தான்
ஒரு நாளல்ல, இரு நாளல்ல, பல நாள்...
அவள் வரவே இல்லை.
அவன் அவளுக்காக காத்திருந்து
துடித்தே இறந்து விட்டான்
செய்தி அறிந்து அவள் வந்தாள்
அப்போதும் தனக்காக காத்திருந்து
இறந்துவிட்டானே என்று பரிதாபப்படவில்லை
அதிலும் குறை கண்டாள்.
நான் வரும் வரை உன்னால்
காத்திருக்க முடியவில்லையே!

- அப்துல் ரகுமான்.